உன் பார்வையால் என்னை
தூரமாய் நின்று கைது செய்தாயடா..
உன் அன்பினாலே என்னை மூழ்கச் செய்துவிட்டு
மௌனம் கொண்டாயடா..
உயிரே என் மீது ஏன் சொல்லாமலே நுழைந்தாய்????????
தினமும் கனவிலே கரங்கள் தீண்டிவிட்டு
கலைந்து சென்றாயடா..
கணமும் பிரியாமல் கரங்கள் கோர்த்து
நாம் என்றும் வாழ்வோமடா...
உடலும் மறந்தேன் உதிரம் உறைந்தேன்
என்ன செய்தாயடா...
தினமும் தொலைந்தேன் தூக்கம் போனது
என்ன செய்தாயோ நீ...
உன்னை காணாமல் உறக்கமில்லாமல்
தவிக்க வைத்தாயடா..
நீ என்னை தாண்டிச் செல்லும்
ஒவ்வொரு நிமிஷமும்
என் வாழ்வில் வெளிச்சங்களே...
இரு மனம் இணைந்திட விதி சேர்த்து வைக்குமா...??
உயிரே என் மீது ஏன் சொல்லாமலே நுழைந்தாய்??
அனைத்தும் இழந்தேன்
அகதியாக்கினாய் அன்பின் முன்னாலே நீ..
இயங்க வைத்து விலகி நின்றாய்
விடையும் தாராயோ நீ..
உன் இதழின் அசைவிலே
ஒலிக்கும் இசை எந்தன் காதில் கேட்கின்றதே..
உன்னை காணாத பொழுதில்
இதயமோ இயங்க மறுக்கின்றதே....

Semma
ReplyDeleteMass