Tuesday, May 4, 2010

பதினாறாம் வயதினிலே.....

மூன்று வயதில் வண்ணத்துப்பூச்சிக்கே பயப்படுவேனாம்....
ஐந்து வயதில் பக்கத்து வீட்டு
கிளிக்கும் பயந்தது நினைவிருக்கின்றது....
கரப்பான் பூச்சிக்கு பயந்து ஊரையே கூட்டினேன் எட்டு வயதில்....
பன்னிரண்டாம் வயதில் பேய்ப்படம் பார்த்து இரண்டு நாட்கள் காய்ச்சல்....
பதினைந்தாம் வயதில் ஒருமுறை,
                   நாயிற்கு பயந்து இரண்டு தெரு சுற்றிச் சென்றிருகின்றேன்....

இன்று....

     பதினாறாம் வயதினிலே,
        உன் இதயச்சிறைக் கைதியாகி விடுவேனோ - என பயந்து
        தினம் தினம் கண்ணீரில் மூழ்கின்றேன்....

உன்னை கருவில் சுமந்த தாய் கூட எனைப் பார்த்து பொறாமைப் படுகிறாள்

இத்தனை பயமிருந்தும்
நான் உன்னை தினம் தினம் இதயத்தில் சுமக்கின்றேன் என.......!!!!!!!!!!!

No comments:

Post a Comment