இது நான் எழுதிய கவிதைகள் அல்ல
என் இதயம் எழுதிய கவிதை...!!
உன்னால் ஆளப்படுகின்ற
நீ இல்லாத ஒவ்வாரு நொடியும்
உன்னையே நினைத்திருக்கும்
என் இதயம் எழுதிய கவிதை...!!
என் இதயம் எழுதிய கவிதை...!!
உன்னால் ஆளப்படுகின்ற
நீ இல்லாத ஒவ்வாரு நொடியும்
உன்னையே நினைத்திருக்கும்
என் இதயம் எழுதிய கவிதை...!!
மறந்து விட்டாயா என்று கேட்டாயே???
எப்படிடா மறப்பேன்???
சிரிக்கும் விழிகளை..
வதைக்கும் இதழ்களை..
அணைக்கும் கரங்களை..
சிதைக்கும் புன்னைகைகளை..
எப்படியடா மறப்பேன் நான்????
சில காலமாக எனக்குள் என்னையே ஒளித்துக் கொண்டிருந்தேன்...
இப்போது
எனக்குள் உன்னையும் ஒளித்துக் கொண்டிருக்கின்றேன் -
எனக்கே தெரியாமல்...
பொக்கிஷங்கள்
கிடைப்பதில்லை..
யார் கையிலும் கிடைப்பதில்லை...
உன்னைப் போல்...!
என் இரவை அழகாக்குவது
நிலவு மட்டும் அல்ல
நீயும் தான்!
நிலவு ஒளியால்...
நீ மொழியால்...
பசி வந்தால் பத்தும் பறந்து விடுவர் என்பர்..
ஆனால்
பத்து நிமிடம்
உன்னோடு பேசிக் கொண்டிருந்தால்
பசியும் பறந்து விடுகிறதே...




ஏன் உன் எழுத்தை நிறுத்தி விட்டாய் ....
ReplyDelete